
சட்டப்பேரவையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது கே. மணி, ”பணிச்சுமை அதிகமாக இருப்பதால் எப்போது பணியாளர்களை நியமிப்பிர்கள்?” என்கிற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன் அங்கன்வாடிகளில் 7 ஆயிரத்து 900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிட ப்பட்டுள்ளது என பதில் அளித்துள்ளார். மேலும் 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதில் தனித்தனியாக 3886 பணியாளர்கள், 305 மினி அங்கன்வாடி பணியாளர்கள், 3592 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.