தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிமூப்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் சிறப்பு விதிகளில் திருத்தம் மேற்கொண்டு பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர் மற்றும் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் பணிகளை ஒரே அலகின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்று தற்போது சிறப்பு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் புலவர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகள் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி. லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார். மேலும் மேற்கண்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன நாளின் அடிப்படையில் மாநில அளவில் சீனியாரிட்டி தயாரிக்குமாறு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.