அரசு ஊழியர்களாக இருப்பவர்களில் சிலர் எழுத்தாளராகவும் உள்ளனர். இவர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். தற்போது இந்த விதியில் தமிழக அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி தமிழக அரசு நடத்தை விதிகள் 1973 இன் கீழ் ஒரு அரசு ஊழியர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். மேலும் இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் போது பதிப்பகதாரிடம் இருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது.

தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. அதன்படி அரசு ஊழியர்கள் அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் தொழில் முறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை வெளியிடுவதற்கு அனுமதி பெற தேவையில்லை.

ஆனால் தகுதியான அதிகாரிக்கு தகவல் தெரிவித்த பிறகு புத்தகங்களை வெளியிடலாம். அந்த புத்தகங்களில் மாநிலத்திற்கு எதிராகவோ, தாக்குதலோ இல்லை மற்றும் புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்த ஒரு ஆட்சேபனைக்குரிய முறையோ உள்ளடக்கமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சுய அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்க கூடாது. இந்த புத்தகம் அரசின் கொள்கை செயல்பாடுகளை எதிர்க்காமல், சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்த சட்ட திருத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.