உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு மொத்தம் 45 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள்  கலந்து கொண்டு திரிவேணி சங்கத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில் மகா கும்பமேளாவில் நீராடுவதற்கு அருமையான ஏற்பாடுகள் செய்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிக்க நன்றி. அம்பானி, அதானி, பல்வேறு நடிகர்கள் வந்து நீராடி விட்டு சென்றுள்ளனர் என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.