
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எப்படி செயல்படுகிறதோ, அதே வகையில் தான் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. எந்த விதமான மனிதாபிமானமும் இன்றி பெண்கள், குழந்தைகள் ஆகியோரை வெட்டி சாய்த்து இருப்பதிலிருந்து இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொடர்பு உள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது என இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதர் குறிப்பிட்டிருக்கிறார்.
எப்படி இஸ்ரேல் நாட்டிலே ஹமாஸ் தீவிரவாதிகள் ஊடுருவல் செய்த போது மொத்த குடும்பங்களையும் பல இடங்களிலே ஒரே இடத்தில் வைத்து சுட்டுக் கொன்றார்கள். இது தவிர வீடுகளை எரித்திருக்கிறார்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்திச் சென்று இருக்கிறார்கள், கற்பழித்து இருக்கிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்திருப்பதாக இதுவரை தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் ஹமாஸ் அமைப்பு நடத்தி இருக்கும் இந்த தாக்குதலிலே நிச்சயமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தொடர்பு இருக்கிறது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புதான் இது போன்ற படுகொலைகளில் ஈடுபடுகின்றது. சிறு குழந்தைகளை கூட கொல்வது, பெண்களை கொல்வது, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற பல்வேறு விஷயங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஈடுபடும். ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தாக்குதலில் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருக்கிறது என இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதர் குறிப்பிட்டிருக்கிறார்.இதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் தெரிவித்திருக்கிறார்.
#WATCH | Israel's ambassador to India, Naor Gilon, says "There is no context into killing people…If you justify terror, then you are a supporter of terror….Israel, India and all peace-loving nations' approach is that terror is never justified…" pic.twitter.com/3WdSuzJOSQ
— ANI (@ANI) October 12, 2023