
தேனி மாவட்டம் ஜங்கால்பட்டி அபிமன்னன் (47), ராஜாமணி (45) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் ஒரு மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மற்றொரு மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். இந்நிலையில் அபிமன்னன், ராஜாமணி தங்களுடைய மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் தோட்டத்தில் கூலித் தொழில் செய்து வந்தனர்.
இவரது மகன் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவர் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று பணம் கேட்டு பெற்றோரை தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த பெற்றோர் அஜித்குமாரை குச்சியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.