
சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் சின்னப்பையன் என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவரது மகன் ஆறுமுகம் டாஸ்மாக் குடோனில் பெட்டித் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 8 மாதத்தில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அதாவது ஆறுமுகத்துக்கும், உறவுக்கார பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த பிரியா தனது கணவரை தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆறுமுகம் வெளியே சென்று விட்டார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.