
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி மிகவும் வியப்பாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது குறித்த அவர் கூறியதாவது, தேர்தலில் பாஜகவுடன் தான் கூட்டணி அமைக்க போகிறோம் இதுதான் விடியலையும் வெளிச்சத்தையும் தரப்போகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. அதிமுக தொண்டர்கள் இந்த கூட்டணியை விரும்பவில்லை. பாஜக நயவஞ்சகமான கட்சி.
அதாவது எந்த கட்சியோடு உறவு வைத்துக் கொள்கிறதோ அந்த கட்சியை அழிப்பது தான் பாஜக உடைய வேலை. அந்த வகையில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து நிர்ப்பந்தப்படுத்தி பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இது இயல்பானது அல்ல. அமலாக்க துறையின் சோதனை மிரட்டலுக்கு பயந்து எடப்பாடி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்று கூறினார்.