
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது . 8 அணியில் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரும் அவரோடு இணைந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் கடந்து கோலி புதிய சாதனை படைத்தார். 257 இன்னிங்சில் ஒரு சாதனையை கோலி அடைந்துள்ளார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார் . ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51 வது சதம் ஆகும். இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் கோலி என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அதாவது கடைசி மூன்று பந்தில் கோலி ஐந்து ரன்கள் எடுத்தார். 43வது ஓவரில் கோலி முதல் பந்தில் சிங்கில் எடுக்க அடுத்து அக்சர் படேலும் ஒரு ரன் எடுக்க, கோலி 96 ரன்களில் இருந்தார். அப்போது, குஷ்டில் ஷா பந்தில் பவுண்டரி அடித்த கோலி சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவும் அதே பந்தில் வென்றது. இந்நிலையில் கோலி சதம் அடித்ததை பார்த்த ரசிகர் ஒருவர் வீடே அதிரும்படி கத்தி கொண்டாடியுள்ளார்.
Cricket is cinema 💥#INDvsPAK #ViratKohli
— Roll Media (@Rollmedia9) February 25, 2025