நாடு முழுவதும் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,128 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான பொதுவான ஆட்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படும். விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. விண்ணப்பங்கள் இம்மாதம் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்டோபரிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.