
மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜக மற்றும் திமுக தலைமையிலான 2 கூட்டங்கள் நேருக்கு நேர் களத்தில் உள்ளன. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த நிலையில், இஸ்லாமியர் மற்றும் சிறுபான்மையினர் மீது வெறுப்பு உண்டு பண்ணும் பிளவுவாத அரசின் யுத்தியை தொடர்ந்து, பாஜக செய்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் தெரிவித்து வருகிறது. இதுகுறித்து துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியதாவது, இந்துக்கள் பிரிந்து இருந்தால் ஆபத்து என்ற பிரச்சார வழக்கத்தை பாஜக தீவிரப்படுத்தி வருகிறது.
ஆனால் அது மகாராஷ்டிராவில் பலிக்காது என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக கட்சியின் இந்த தந்திரம் வேலைக்காவாது என்றும் உத்திர பிரதேசம், பீகார் போன்ற இடங்களில் இது வேலை செய்யலாம் என்றும், அவர் இந்த மாநிலம் எப்போதும் மத நல்லிணக்கம் கொண்ட மாநிலம் என்றும், பாஜகவின் மதுவாத கோஷங்களுக்கு செய்தித்தாள் ப்ரமோஷன் கொடுத்து வருகிறது என்றும், பாஜக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களை எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்றும் கூறினார்.