தமிழகத்தில் தொடர்ந்து விடுமுறை வருவதால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதாவது தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் மிலாடி நபி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் தற்போது ஆம்னி பேருந்துகள் தங்களுடைய கட்டணத்தை அதிக அளவில் உயர்த்தி உள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து மதுரைக்கு செல்வதற்கு ரூ.1900 முதல் ரூ‌.4000 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்கு 2000 முதல் 4500 ரூபாயும், திருநெல்வேலி செல்வதற்கு 2000 ரூபாய் முதல் 4200 ரூபாயும், நாகர்கோவில் செல்வதற்கு 2500 முதல் 4500 வரையிலும் கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பஸ் கட்டணம் திடீரென அதிக அளவில் உயர்த்தப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.