மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பண மதிப்பிழப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற பி.ஆர். கவாய் தீர்ப்பில் இருந்து மாறுபடுகின்றேன் என நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பணமதிப்பிழப்பு வழக்கில் விரிவான விசாரணைக்காக அதிக நீதிபதிகள் கொண்ட நீதிபதிக்கு அனுப்ப பரிந்துரை. வழக்கில் மேலும் பல கேள்விகளுக்கு பதில் காண வேண்டி உள்ளதால் கூடுதல் நீதிபதி கொண்ட அமர்வுக்கு அனுப்ப பரிந்துரை. ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகள் படி ஒன்றிய அரசு முடிவு எடுக்க முடியாது என்று நீதிபதி நாகரத்னா தீர்ப்பு.

ஒன்றிய அரசு சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும். ரகசியத்தை காக்க தேவைப்பட்டால் அவசர சட்டம் கூட நிறைவேற்றி இருக்கலாம். பண மதிப்பிழப்பு செல்லும் என்பதிலிருந்து நான் மாறுபடுகின்றேன். நாடாளுமன்றம் என்பது நாட்டின் இன்னொரு வடிவம். முக்கியமான நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மையப் புள்ளியான நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.