நடப்பு டி10 உலகக்கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இன்று இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்தியா கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் உத்வேகத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்க அணியுடன் இறுதிப் போட்டியில் மோத இருக்கிறது.

இந்தப் போட்டி பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ் டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் மழையினால் போட்டி நின்றால் யாருக்கு ‌ வெற்றி வாய்ப்பு என்பது குறித்து பார்ப்போம். அதாவது போட்டி இன்று பாதியில் மழையினால் நின்றால் நாளை ரிசர்வ் நாளில் போட்டி விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கும். ஒருவேளை நாளையும் மழையினால் போட்டி நின்றால் இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். மேலும் இரு அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால்தான் ஆட்டத்தின் முடிவு தெரியவரும்.