
காஷ்மீர் உட்பட இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக முசாபாராபாத்தில் நடைபெற்ற காஷ்மீர் ஒற்றுமை தினத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய இருப்பதாவது, காஷ்மீரிகளுக்கு ஆதரவை காட்ட இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றது. மேலும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். ஆகஸ்ட் 5 2019 அன்றைய சிந்தனையிலிருந்து இந்தியா வெளியே வந்து ஐ.நா-விற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். அதோடு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைதான் என கூறினார்.
மேலும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலும் ஆயுதங்களை சேமித்து வைத்திருப்பதாக இந்தியா மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு ஆயுதங்களை சேமித்து வைப்பது அமைதியை கொண்டு வராதது என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் வன்முறையில் ஈடுபடும் குழுக்களை ஆதரிப்பதாக விமர்சிக்கப்படுகின்றது. இந்தியாவின் அணுகுமுறை அமைதியை மையமாகக் கொண்டுள்ளது. இப்போதைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்துமா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆகவே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியான சூழலை உருவாக்கினால் மட்டுமே பேச்சு வார்த்தைகள் நடக்கும் என்று இந்தியா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.