
வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்து கோவில்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து பேரணி ஒன்றில் அவர் வங்கதேசத்து கொடியை அவமதித்து விட்டதாக கைது செய்யப்பட்டார். இதில் இந்துக்களின் வீடுகள் மற்றும் கோவில்கள் சூறையாடப்பட்டு வந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து மத்திய வெளி விவகார அமைச்சகம் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று வங்காளதேசத்து அரசை வலியுறுத்தியது. இதில் இந்தியாவின் மூவர்ண கொடி அவமதிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வங்காளதேச நோயாளிகளுக்கு இனி சிகிச்சை வழங்கப்படாது என்று வடக்கு கொல்கத்தா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கே.என்.ரே மருத்துவமனையை சேர்ந்த சுப்ரான்ஷூ பக்த் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிராக நடந்து கொண்டதால் வங்காளதேசத்து நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப் போவதில்லை. இன்று முதல் காலவரையின்றி சிகிச்சை வழங்கப்படாது. அது பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். இவர்கள் சுதந்திரம் பெறுவதில் இந்தியா முக்கிய பங்காற்றியது. இவ்வாறு இருந்த போதிலும் வங்காளதேசம், இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்ற மருத்துவமனைகளும் எங்களுக்கு ஆதரவு தந்து இது போன்ற முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம் என்று கூறினார்.