இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் ஐபிஎல் தொடரில் ‌ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியவர். இவர் இந்த வருடம் முடிவடைந்த 17-வது ஐபிஎல் சீசனில் விளையாடிய நிலையில் அதன்பின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு ஐபிஎல் உட்பட சர்வதேச கிரிக்கெட் போட்டி என அனைத்திலும் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியின் ஆலோசகர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.