பதினெட்டாவது ஐபிஎல் சீசன் திருவிழாவானது நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியதில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐந்து முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியானது 19.1 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்து வீசிய சிஎஸ்கே வீரர் நூர் அகமது ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் GT அணியுடன் போட்டியிட்டு 10 கோடிக்கு நூர் அகமதை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.