வயநாடு மாவட்டம் முன்னானிக்குழி பகுதிகள் பாருக்குட்டி 101 மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது பேரன் மற்றும் பேத்திகளுடன் இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய புறப்பட்டார். இதற்கு முன்னதாக இவர் கோனேரி நாராயண குரு சண்முக கோவிலில் நெய், தேங்காய் மூலம் இருமுடி கட்டினார். இவர் கடந்த ஆண்டு தனது 100 வயதில் முதல் தலைமுறை சபரிமலை சென்று தரிசனம் செய்தார்.

அப்போது அவரது வயதுமுதிர்வை கருத்தில் கொண்ட காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் சிக்கி விடாமல் தரிசனம் செய்ய வைத்தனர். இதனால் மீண்டும் அவர் இந்த வருடம் சபரிமலை செய்ய விரும்புவதாக கூறினார். அவர் சபரிமலை ஏரி கூட்டத்தில் சிக்காமல் இருந்து தரிசனம் செய்ய போதுமான வசதிகளை செய்து கொடுக்க பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.