தமிழ்நாடு, கேரளா எல்லையான ஆணைக்கட்டு அடுத்த அட்டப்பாடியில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இவரை பார்ப்பதற்கு என்று காலை, மாலை என இரு வேளையிலும் ரஜினிகாந்த் தங்கி இருக்கக் கூடிய ரிசார்ட் இருக்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை ரிசார்ட்டில் இருந்து வெளியே வந்த ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்களை பார்த்து, ரஜினிகாந்த் கைது செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.