சென்னை புளியந்தோப்பில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கும், பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் பிரசவத்திற்காக போலியான ஆதார் கொடுத்து குழந்தை திருமணத்தை மறைத்து இருக்கின்றனர்.

குழந்தை பிறந்து 6 மாதத்தில் இந்த தம்பதியினரின் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தெரிந்துவிட தாய் வீட்டில் இருந்த பெண்ணுக்கு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சதிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்து சில நாட்களுக்கு முன்பு சிறுமி அவருடன் ஓடி உள்ளார். இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மையும் வெளிவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரகாஷ், சிறுமியின் புதிய காதலர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.