துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 5 முறை பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பலி எண்ணிக்கை 16000-ஐ தாண்டி உள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.