தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் பேரருவி , ஐந்தருவி , பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி அருவிகளில் குளிக்க 3 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.