கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ விசாரித்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை கடந்த 9-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் கடந்த 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்றும், தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கிடையில் சஞ்சய ராய் நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று அவரது சகோதரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சட்டம் என்னுடைய சகோதரனை குற்றவாளி என்று கூறியுள்ளது அதன்படி அவருக்கு தண்டனை வழங்கப்படும். நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை. எனக்கு வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை என்று கூறினார். சஞ்சய் ராய்க்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.