கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் தனியார் தோட்டத்திற்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தென்னை மரத்தில் ஏற பயன்படுத்தும் இரும்பு ஏணி மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதாக தெரிகிறது.

இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.