இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் 9-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். பதிவு ஏற்ற பின்பு அவர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிகமாக தமிழர்கள் வடக்கு பகுதியில் வாழ்கின்றனர். அவர்களுக்கு சொந்தமான நீர் வளங்களை தமிழக மீனவர்கள் அளிக்கின்றனர். எங்கள் அரசாங்கம் நீர் வளங்களை தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும். அத்துமீறி வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம்.

போரினால் ஜாப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு வாழும் தமிழர்கள் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை மீட்பதற்காக இன்றும் போராடி வருகின்றனர். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அனுரா குமார திசநாயகே கூறியுள்ளார். இதற்கிடையில் இலங்கைக்கு சொந்தமான இடத்தில் மீன் பிடிப்பதற்காக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மொத்தம் 23 மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்கள் சென்ற படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.