அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலுவைச்சேரி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரச்செல்வன் என்ற மகன் இருக்கிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் நர்சிங் கல்லூரி மாணவியான சௌந்தர்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சேத்தியாதோப்பு தீப்பாஞ்சம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.