
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து பகுதியில் தாமஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இந்நிலையில் தாமஸ் ராஜும் கம்பிளியம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது உடன்பாடு ஏற்படவில்லை. அவர்கள் மேஜர் என்பதால் உங்கள் விருப்பப்படி வாழலாம் என கூறி போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்