மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் பருவமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை பெய்கிறது. இந்நிலையில் வருகிற 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.

இது மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு உருவாக இருக்கிறது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த வாரம் மத்திய வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா அருகே கரையை கடந்தது.

இதனால் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து, வெள்ளக்காடானது.  ஆனால் தற்போது இந்த காற்றழுத்து தாழ்வு பகுதியால் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்து 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மன்னர் வளைகுடா, தென் மாவட்ட கடலோரப் பகுதிகள் அதை ஒட்டிய குமரி கடல் பகுதியில் அடுத்து 3 நாட்களுக்கு மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.