
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர், திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. நான் எங்கு செய்தியாளர்களை சந்தித்தாலும் தமிழகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளை குறித்து தான் கேள்வி கேட்கின்றனர். மாற்றுத்திறனாளிடம் மகாவிஷ்ணு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மகாவிஷ்ணு திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும்படி பேசியது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.