
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு ஆலன்விளை பகுதியில் கொத்தனாரான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜோசப் ராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவரை மேரி பாய் கண்டித்தார்.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜோசப் ராஜ் தூக்கு மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மேரி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது கணவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஜோசப் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.