மணிப்பூரில் தொடரும் வன்முறையும், சட்ட விரோதமும் ஆழ்ந்த கவலையளிக்கிறது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மத்திய அரசு இதை ஒரு முன்னுரிமைப் பிரச்சினையாகக் கருத மறுப்பதால் நான் திகைக்கிறேன். அனைத்து சமூகங்களும் சமமாக நடத்தப்பட்டு பாதுகாக்கப்படும் விரைவான தீர்வை உறுதிசெய்யவும்.

பாஜக இதை உரிய தீவிரத்துடன் கையாள வேண்டும் என்றும், மணிப்பூரில் பெரும்பான்மை அரசியலை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார். மேலும் மணிபூரில் நடந்த இன கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.