
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண விழா நாளை காலை 9:00 மணிக்கு வடசென்னை சுங்க சாவடியிலுள்ள தங்க மாளிகையில் வைத்து நடைபெறுகின்றது. இதில் 48 ஜோடிகளின் மணவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்றி நடத்தி வைப்பதோடு மணமக்களுக்கு தேவையான சீர்வரிசை பொருள்களும் வழங்கி வாழ்த்து கூறவும் இருக்கின்றார். திருமண விழாவில் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ஆர்.டி சேகர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
மேலும் பகுதி செயலாளர் லட்சுமணன், ஜெயதாஸ், பாண்டியன், சுரேஷ், செந்தில்குமார், ஜெயராமன், முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர்கள் பொன்முடி பி. கே சேகர் பாபு, டாக்டர் கலாநிதி, வீராசாமி, எம்எல்ஏக்கள் ஜேஜே எபினேசர், மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். விழாவில் நிர்வாகிகள் இளைய அருணா, மனோகரன், ரா. கருணாநிதி, மதிவாணன், மருது கணேசன், நரேந்திரன், வெற்றி வீரன், எஸ். ஆர் கமலக்கண்ணன், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். அதோடு முடிவில் வட்ட செயலாளர் என்.எம் கதிரேசன் நன்றி உரை கூற இருக்கின்றார்.