
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இந்த முறை பருவமழை சாதகமாக உருவாகியது என கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணையின் திட்டத்தின் மூலம் தமிழகம் பயன்பெறும் என்று அவர் கூறினார். தமிழகம் வந்த டி.கே. சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி.கே சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளது, இதன் காரணமாக இந்த அணையை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த 2 மாநிலத்திற்கும் வர்ண பகவான் உதவுவார். சென்னையில் உள்ள துப்புரவு திட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது. இதற்காக நான் அரசாங்கத்தை வாழ்த்து தெரிவித்தேன். இங்கு வந்தது எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக இருந்தது என்று தெரிவித்தார்.