
கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினமும் மலை ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. பழமைவாய்ந்த இந்த மலை ரயில்பாதை அடர்ந்த வனப் பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ளது.
இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டு அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் போன்ற இயற்கை அழகை கண்டு ரசிக்க பெரும்பாலான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் உதகை இடையில் கோடைகால சிறப்பு மலை ரயில் போக்குவரத்து சேவை வருகிற 14ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.