
சென்னையில் அ.தி.மு.க முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க அழிவு பாதைக்கு செல்லும் என்று அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஜெயக்குமார் கூறியதாவது, பா.ஜ.க அல்லாத மற்ற எந்த கட்சிகளுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும் என்பதை பற்றியும் பொது செயலாளர் மற்றும் கட்சியும் முடிவு செய்வார்கள். மேலும் பா.ஜ.க-வை பொருத்தவரை அவர்களுடன் கூட்டணி நேற்றும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இருக்கப் போவதில்லை என்று பொதுசெயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதோடு 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை எங்கள் பொது செயலாளர் கூறிவிட்டார். இருப்பினும் டிடிவி தினகரன் தன் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக இன்று பா.ஜ.க-விடம் சரணடைந்துள்ளார். அதிமுக என்பது தன்மானத்தோடு இயங்கும் இயக்கமாகும். அதுமட்டுமல்லாது எங்களுக்கு யார் காலிலும் விழவேண்டிய அவசியம் இல்லை. கட்சியின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பொதுசெயலாளர் முடிவு எடுத்துள்ளார். அந்த முடிவு தான் தொடருமே தவிர அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.