
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீர சின்னம்பட்டி பகுதியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தோட்டம் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்தத் தோட்டத்தில் குரங்கு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் ரூ.1000 கொடுத்து ஜெயமணி என்பவரை அழைத்து நாட்டுத் துப்பாக்கியால் குரங்குகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.
அதன் பின் அதனை சமைத்து இருவரும் சாப்பிட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.