தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்தார். கடந்த மாதம் இவரது 8 வயது மகன் பள்ளிக்கூடத்தில் அளிக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட அவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் செல்வகுமார் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று செல்வகுமார் ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப் பார்த்து ரயில்வே காவல்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கினர். இதைத் தொடர்ந்து உடல்நிலை சரியான பின் வீட்டுக்கு வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.