
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன்(45), உமா(42) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கல் சூலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டன், உமாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வீட்டிற்கு சென்ற இவர்கள், உணவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர்.
ஆனால் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையின் மீது அம்மி கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று தான் மனைவியை கொலை செய்து விட்டதாக சரண் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.