
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது ஆசிரியர்களின் நலனை காப்பதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்.
1. அனைத்து இடைநிலை பட்டதாரிகளுக்கும் கைக்கணினி வழங்கப்படும்.
2. அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
3. அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
4. உயர்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச் செலவு 50,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
மொத்தம் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது என அவர் அறிவித்துள்ளார்.