உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறும். இந்த மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்வில் இந்துக்கள் இல்லாதவர்கள் கடை வைப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரயாக்ராஜில் கும்பமேளாவின் போது அழகாகவும், சுத்தமாகவும், தெய்வீகமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்.

அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தை பாதுகாக்க இந்துக்கள் இல்லாதவர்கள் விலக்கி வைக்க வேண்டும். அவர்களுக்கு கடை வைக்க அனுமதி கொடுக்கக் கூடாது. ஏனெனில் அவர்களுக்கு கடைகளை கொடுத்தால் எச்சில் துப்புவது, சிறுநீர் கழித்தல் போன்ற சுகாதாரமற்ற செயல்களின் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறினார். முன்னதாக ‘மனிதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக கும்பமேளா திகழ்கிறது என்றும், இந்த நிகழ்வில் எந்த ஒரு பாகுபாடும் இருக்காது அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் மகன் ரவீந்திர குருவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.