செய்தியாளர்களிடம் தமிழக பாஜகவின்  மாநில தலைவர் அண்ணாமலை, நானே இதைவிட அதிகமா 10,  15 மடங்கு பவரை பார்த்தவன் நானு. போட்டோ போட்டி,  இது, அதுன்னு…   நான் நிம்மதியா என் வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன். காலைல எனக்கு பிடிச்சது செய்றேன்,  நேத்து தோட்டத்துக்கு போனேன். ஆடு,  மாட்டை பார்த்தேன். எனக்குன்னு ஒரு தனி வாழ்க்கை இருக்கு.

அந்த குட்டி உலகத்துல நான் வாழ்கிறேன்.  அரசியல் என்னுடைய கருத்துக்களை நான் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இதை மாத்தி பேசி தான் இருக்கணும்னா…  இருக்க போறது கிடையாது. அப்படி மாத்தி பேசினா…  அண்ணாமலை இருக்க மாட்டான்…

என்னுடைய தனி உலகத்துல….  ஒரு சூழலில் அரசியல் பண்றேன்….  மோடிக்காக அரசியல் வந்துருக்கேன். மோடியை தவிர இன்னொரு தலைவரை இந்தியாவுக்கு 100 ஆண்டுகள் கிடைக்கப்போவது கிடையாது.  அண்ணாமலை அட்ஜஸ்ட்மென்ட் பாலிடெக் எப்போதும் கிடையாது. ஒரு கருத்தை எடுத்தால் இடும்பு பிடி மாதிரி பிடிப்பேன்.

இன்னைக்கு அந்த கருத்துக்கு நேரமில்லைன்னா அஞ்சு வருஷத்துக்கு பிறகு அந்த கருத்துக்கான நேரம் வரத்தான் போகுது. கருத்து என்ன ஓடிப்போயிருமா..? என்னை யாருக்காகவும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனக்காக வேண்டாம்ன்னா சில பேர் மாறலாம் என தெரிவித்தார் .