தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு என்று புதிய அறிவிப்பு அமலுக்கு வந்தது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, போக்குவரத்து காவல்துறை வழங்கி உள்ள பரிந்துரையின்படி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் வருகிற 4-ம் தேதி முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 589 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு  தற்போது கூடுதலாக 14 பஸ்கள் 816 பயணம் அடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.