இத்தாலியில் வசிக்கும் லூகி பெராரி என்பவர் தனது 28 வயதான மகனுடன் இலங்கையை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அங்கு தென்கிழக்கு இலங்கையில் உள்ள பிரபலமான யாலா தேசிய பூங்காவை அவர்கள் சுற்றிப் பார்த்தனர். அப்போது அங்குள்ள பட்டாம்பூச்சிகளை ஒரு கண்ணாடி குடுவைக்குள் அடைத்து சேகரித்தனர். பின்னர் அவற்றை கொன்று கெமிக்கல் மூலம் பதப்படுத்தி தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் அங்குள்ள வனக்காப்பாளர்களால் கையும் களவுமாக பிடிபட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விசாரிக்கும் போது அவர்கள் 300-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை கொன்று பதப்படுத்த முயன்றதான தகவல் வெளிவந்தது. இதையடுத்து தந்தை, மகன் ஆகிய 2 பேருக்கும் சுமார் ஒன்றரை கோடி அபராதமும், அதை கட்ட தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்திரவிட்டார்.