இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு விஷயம் நடந்தாலும் அதை இணையத்தில் வீடியோவாக வெளியாகிறது. அதற்கு காரணம் தற்போது நாம் பாவித்து வரும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தான். சமீப காலமாக ரயில் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. அதில் பல உயிர் சேதங்களும் பொருள் சேதங்களும் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே தண்டவாளத்தில் இரண்டு பிரிவுகளை மிகப்பெரிய கம்பியை கொண்டு சேர்த்து வைத்திருப்பார்கள். இவை ரயில் வரும்போது அதிர்வுகளை ஏற்படுத்தி விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இப்படி இருக்கும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ரயில் பயணிக்கும் தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த சேதத்தை சரி செய்யாமல் அதன் மீது ரயில் ஒன்று பயணித்த காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.