உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு பிறக்கும்போதே வயிற்றில் இரண்டு கால்கள் இருந்தது. சிறுவன் வளர வளர கால்களும் பெரிதாக வளர்ந்தது. அந்த சிறுவன் பள்ளியில் படிக்கும் போது வயிற்றில் கால் இருந்ததால் சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் அந்த சிறுவன் மன வேதனையில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தினான். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தற்போது சிறுவனின் வயிற்றில் வளர்ந்த கால்களை வெற்றிகரமாக அகற்றி விட்டனர்.

இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் மூத்த டாக்டர் ஒருவர் கூறும் போது இரட்டை கரு வயிற்றில் உருவானால் ஒரு குழந்தை சரிவர வளர்ச்சி அடையாமல் அதன் எதிரொலியாக இப்படி வயிற்றில் கால்கள் போன்ற உடல் உறுப்புகள் வளர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் இதுபோன்ற நான்கு கால்களுடன் இதுவரை 42 பேர் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.