
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தகரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (26) என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 23 வயதான பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் .இந்நிலையில் விஜய் அந்த இளம் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் விஜய்யின் தொல்லை அதிகரித்துள்ளது. அதனால் அந்தப் பெண், அவரது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விஜய்யை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.