சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் எலக்ட்ரீசியனான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக எலக்ட்ரீசியன் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்