திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மார்க்கம்பட்டியில் நிதி நிறுவன அதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாலா என்ற மனைவி உள்ளார். நேற்று குப்புசாமி தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர்-வடமதுரை சாலையில் ஸ்ரீ ராமாபுரம் அருகே சாலையை கடக்க நின்ற போது பின்னால் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த குப்புசாமி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிமாலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குப்புசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.