கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் விவசாயியான குமாரசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அருமையான குமாரசாமி தனது குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கர்ப்பிணியான மகளை பார்ப்பதற்காக ஈஸ்வரி திருப்பூர் சென்ற நேரம் குமாரசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.